லண்டன்: இங்கிலாந்து இளவரசர் 99வயதான பிலிப் காலமானார்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தார். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள கிங் ஏழாம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
பின்னர் மீண்டும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்,‘மார்ச் 2ந்தேதி மீண்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயம் செயல்படுவதில் பிரச்சினை உள்ளதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மருத்துவர்கள், சில நாட்கள் மருத்துவமனையிலேயெ தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என கூறியதாக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இளவரசர் பிலிப் உயிரிழந்து விட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.
இளவரசர் பிலிப் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.