சென்னை:

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை, ஷாப்பிக் சென்றதாக புகைப்படம் வெளியிட்டு வம்புக்கு இழுக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் அடையாறில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு விதியை மீறி எவ்வித சலுகைகளும் காட்டப்படவில்லை. அவர் சிறையில் இருந்து ஷாப்பிங் சென்று வருவது போல் புகைப்படம் வெளியிடப்படுகிறது.  இதன் மூலம் சிறையில் இருப்பவர்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள்.

15 நாட்களுக்கு ஒரு முறை தான் சசிகலாவை பார்க்க சிறை நிர்வாகம் அனுமதி வழங்குகிறது என்றார்.

மேலும், அடுத்த மாதம் ( ஆகஸ்ட்)  4ஆம் தேதிக்கு பின் கட்சி பணிகளில் வழக்கம்போல் ஈடுபடுவேன் என்றார்.

கமல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிடிவி, அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கமல் காழ்புணர்ச்சியுடன் சொல்கிறாரோ என்று எண்ணம் தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.