டில்லி,

சொகுசு கார் விவகாரத்தில் முறைகேடு செய்ததாக கடந்த 2010ம் ஆண்டு  தண்டனை விதிக்கப் பட்ட சசிகலா கணவர் நடராஜன், மேல்முறையீடு செய்த வழக்கிலும் அவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில, அவர் சரண் அடைய உச்சநீதி மன்றம் விலக்கு அளித்துள்ளது. அவர் உடல் நிலையை காரணம் காட்டி, விலக்கு கேட்டதை தொடர்ந்து, அவருக்கு விலக்கு உச்சநீதி மனற்ம் விலக்கு அளித்துள்ளது.

லண்டனிலிருந்து லக்சஸ் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டதில் போலி ஆவணங்கள் கொடுத்து, முறைகேடு செய்து, சுங்கவரி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலாவின் கணவர் நடராஜன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.  இந்த வழக்கில்  2010ம் ஆண்டு அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மனுவை  விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட 4 பேருக்கு சிபிஐ முதன்மை நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டது.

இதற்கிடையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடராஜன், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சிறையில் அடைக்கப்பட்டு விடுவார் என எண்ணி,  உடடினயாக  தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை என கூறி அட்மிட் ஆனார்.

அதே வேளையில், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்  தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா கணவர் நடராஜன் சரண் அடைய விலக்கு அளித்தது.

இதுபோல சிறை தண்டனை விதிக்கப்பட்ட  சசிகலா உறவினரான பாஸ்கரனும் விலக்கு பெற்றுள்ளார்.