நடிகர் ப்ரித்விராஜ் முழுக்க மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்கும் இந்தப் படத்தை ப்ரித்விராஜே, மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார். இது குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள ப்ரித்விராஜ் “திரைப்பட உருவாக்கத்தின் கலை மற்றும் அறிவியலில் இது ஒரு ஆச்சரியமான புதிய அத்தியாயம். மாறும் காலம், புதிய சவால்கள், புதுமையான வழிமுறைகள் சொல்ல ஒரு அட்டகாசமான கதை என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உருவாகவுள்ளது.