சென்னை:
மிழகத்தில் தனியார் பள்ளிகள்  3தவணைகளாக   75% கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படு வதாக தமிழக அரசு சென்னை  நீதிமன்றத்தில்  தெரிவித்து உள்ளது.

கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில், தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உடனே செலுத்தும்படி பெற்றோர்களை வலியுறுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.
இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த விசாரணை யின்போது,ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க கட்டணம் வசூலிக்க லாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் பள்ளிகளுக்கு அவசர உத்தரவு ஒன்றை அனுப்பியிருந்தது.  “பள்ளி கட்டணம் தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தன்னுடைய முடிவை தெரிவிக் கும் வரையில் தனியார் பள்ளிகள் காத்திருக்க வேண்டும். நாளை வரை எந்தவிதமான கட்டணத்தை யும் பள்ளிகள் வசூலிக்கக் கூடாது” என்று  அறிவித்திருந்தது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  “தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது தற்போது 25%, பள்ளிகள் திறந்த பிறகு 25%, பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு பிறகு 25% என மூன்று தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளது