2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் புருவத்தை உயர்த்தி கண்ணாடிக்கும் ஒரே காட்சியின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.
இதனால் இவ்ருக்கு சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் கூடினர் . அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 72 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்திலிருந்து ப்ரியா பிரகாஷ் வாரியர் வெளியேறியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டல்களும், வசைகளும் அதிகரித்து வந்ததே அவர் வெளியேறியதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.
எனினும் அவர் இன்னும் ஃபேஸ்புக், டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் நீடித்து வருகிறார்.