கர்நாடக மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சயனைடு மோகன் என்ற பயங்கர குற்றவாளி 20 பெண்களை சயனைடு வைத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அது குறித்த வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சயனைடு மோகன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர் .
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகவிருப்பதாகவும், நான்கு மொழிகளிலும் பிரியாமணி நாயகியாக நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.