உத்தரபிரதேச மாநிலம் காசிபூர் மாவட்டத்தை சேர்ந்த திரிபுவன் சிங், தீவிர காங்கிரஸ் தொண்டர். இந்திரா காந்தி குடும்பம் மீது தனிப்பாசம் கொண்டவர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரவின் பேரில் உ.பி.யில். காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாயத்து மட்டத்தில் புதிதாக கிளைகளை அமைத்து, தலைவர்களை நியமிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

காசிபூரில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொள்ள திரிபுவன் சிங், வட்டார காங்கிரஸ் தலைவருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது நிகழ்ந்த சாலை விபத்தில் திரிபுவன் சிங், உயிர் இழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பிரியங்கா காந்தி, திரிபுவன் குடும்பத்தாரிடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

பிரியங்கா உத்தரவின் பேரில் காங்கிரஸ் செயலாளர் பஜ்ராவ் காடே என்பவர், உ.பி.மாநில காங்கிரஸ் சார்பாக மரணம் அடைந்த திரிபுவன் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் பணம் வழங்கினார்.

“பிரியங்கா ஆணையின் பேரில் இந்த நிதி அளிக்கப்படுகிறது” என தெரிவித்த பஜ்ராவ் காடே, “ஒவ்வொரு தொண்டரும் எனக்கு முக்கியம் என்பதை இந்த நிகழ்வின் மூலம் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தொண்டர்களுக்கு உணர்த்தியுள்ளார்” என குறிப்பிட்டார்.

– பா. பாரதி