தனது வீட்டில் குடியேறும் பா.ஜ.க. எம்.பிக்கு தேநீர் விருந்து கொடுக்கும் பிரியங்கா..

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குடும்பத்துக்கு, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால், அவர் மனைவி சோனியா, பிள்ளைகள் ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு ( எஸ்.பி.ஜி) அளிக்கப்பட்டிருந்தது.

பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின், எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

எஸ்.பி.ஜி.பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதால், டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில், மத்திய அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் தங்கி இருந்த பிரியங்காவை காலி செய்யுமாறும், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.

வரும் ஒன்றாம் தேதிக்குள் பிரியங்கா அந்த வீட்டை காலி செய்ய வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளைப் பிரியங்கா மேற்கொண்டுள்ளார்.

பிரியங்கா காலி செய்யும் பங்களா, பா.ஜ.க.வின் ராஜ்யசபா எம்.பி.யான  அனில் பலூனி என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தான் காலி செய்யப்போகும் வீட்டில் குடியேறும் எம்.பி.என்ற முறையில் , அனில் பலூனுக்கு தேநீர்  விருந்தளிக்க முடிவு செய்துள்ளார், பிரியங்கா.

அனிலுக்கு சவுகரியப்படும் நேரத்தில் தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள பிரியங்கா, அந்த வீட்டை காலி செய்ய இன்னும் நான்கு தினங்கள் மட்டுமே உள்ளது.

-பா.பாரதி