டில்லி

லோக் பால் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிய பிறகு அங்கு புகார் அளிக்கும் விதிமுறைகள் வெளியாகி உள்ளது.

லோக்பால் என்னும் மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது.  இந்த நீதிமன்றம் அமைக்கப்படும் என உத்திரவாதம் அளித்து மத்திய அரசை கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக கைப்பற்றியது.   ஆயினும் அதற்கான நடவடிக்கை வெகு நாட்களாக எடுக்கப்படாமல் இருந்தது.   கடந்த வருடம் தேர்தல் நெருங்கி வருவதால் லோக்பால் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிய நிலையில் தற்போது இந்த லோக்பால் நடைமுறைகள் வெளியிடப்ட்டுளன.  இந்த லோக்பாலில் பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள், முன்னாள், இந்நாள் பிரதமர்கள் மீதான குற்றச்சாட்டுகளை இந்த அமைப்பு விசாரணை நடத்தும். முழுமையான அமர்வு, புகார் வந்த உடனே, அந்த புகாரினை விசாரிக்கலாமா என்பது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தும். இந்த புகார்களை, அந்த விசாரணைக்குழு ஆரம்பத்திலேயே நிராகரித்து விட்டால், அந்த புகார்கள் தொடர்பான தரவுகளை லோக்பால் வெளியிடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்று முன் தினம் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் லோக்பாலில் எப்படி புகார்களை பதிவு செய்வது என்பது தொடர்பான நடைமுறைகளை அறிவித்தது. பிரதமர் மீது தொடரப்படும் வழக்குகளை விசாரிக்கலாமா, வேண்டாமா என்பதை, லோக்பால் தலைவர் தலைமையிலான அமர்வு முடிவு செய்யும்.  இதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் விசாரணைக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே பிரதமர் மீதான வழக்குகளை விசாரிக்க முடியும்.

இச் சட்டத்தின் 14வது பிரிவின், உட்பிரிவு (1)-ன் (a) பிரிவில் அரசு ஊழியர்களுக்கு எதிராக அளிக்கப்படும் புகார்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அச் சட்டத்தின் உட்பிரிவி (1)-ன் பிரிவு (a)-வின் துணைப்பிரிவு (ii)-ன் கீழ் முழுமையான விசாரணை அமர்வின் முடிவுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிவு 14 (1) (ii)-ன் கீழ், இந்த விசாரணைகள் கேமரா மூலம் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்கிறது. பதியப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவது குறித்து லோக்பால் முடிவு எடுக்கும் பட்சத்தில் அந்த கேமரா பதிவுகள் வெளியிடப்படமாட்டாது.  அத்துடன் மத்திய அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் மீது புகார்கள் வந்தால், இந்த புகார்களை விசாரிக்கலாமா வேண்டாமா என்பதை 3 பேருக்கும் குறையாத அமர்வு முடிவு செய்யும்.

தற்போது புதிதாக அறிவிக்கப்பட்ட செயல்வடிவத்தின் படி, ஓய்வுபெற்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஸ், லோக்பாலின் விசாரணை குழுவிற்கு புகார்களை அனுப்பலாம். மற்றும் ப்ரைமா ஃபேஸி வகை புகார்கள் வந்தால், அந்த புகாரினை விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரை செய்யலாம். புகார் அளிக்கும் நபரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அரசு. விசாரணை முடிவடையும் வரையில் புகார்தாரரின் அடையாளம் வெளியிடப்பட மாட்டா து.

லோக்பாலில் அளிக்கப்படும் புகார்களின் உள்ளடக்கங்கள் தெளிவற்றவையாகவும், அற்பத்தனமாகவும், இருந்தாலோ மற்றும் அந்த  புகாரில் அரசு ஊழியர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்படாத போதும், நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் கீழ் விசாரணையில் இருக்கின்ற புகார்களையும் விசாராணை செய்யாது என்று அறிவித்துள்ளது.

இ மெயில் வழியாக அளிக்கப்படும் புகார்கள் 15 நாட்களில் லோக்பாலுக்கு சமர்பிக்கப்படும்.   லோக்பாலில் கடற்படை சட்டம், ராணுவ சட்டம், விமானப்படை சட்டம், அல்லது கடலோர காவல்ப்படைச் சட்டத்தின் கீழ் புகார்களை அளிக்க முடியாது.  இந்தியர் அல்லாதோரும், தன்னுடைய பாஸ்போர்ட் நகலை உடன் இணைத்து லோக்பாலில் புகார்களை பதிவு செய்யலாம்.