இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில்,தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.