விருதுநகர்:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் நீதிமன்ற காவல் மே-23ம் தேதி வரை நீட்டித்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி ஆசிரியை கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் சிபிசிஐடி 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட னர். அதைத்தொடர்ந்து   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து, மீண்டும் விருதுநகர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அவரது காவலை வரும் 23ந்தேதி வரை நீட்டித்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து மீண்டும்  மதுரை மத்திய சிறையில்  அடைக்க நிர்மலாதேவியை போலீசார் அழைத்து சென்றனர்.