சென்னை:

மாணவிகளுக்கு செக்ஸ் அழைப்பு விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் அவரது நண்பரும், உதவி பேராசிரியருமான முருகனை காவல்துறையினர் தேடி வந்தனர்.

முருகன், காமராஜர் பல்கலையில் மேலாண்மை கல்வித்துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். காவல்துறையினர் தேடுவதை அறிந்து தலைமறைவானார்.

முருகன்

இந்த நிலையில் இன்று காமராஜர் பல்கலையில் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட வந்தபோது அவரை சுற்றிவளைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.