சென்னை:

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,ஆதரவற்றோர்களுக்கு உதவுவதற்காக பொதுமக்கள் உணவுப்பொருட்களை வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையோர மக்களுக்கு உதவ எண்ணுபவர்கள், உணவை சமைத்து வழங்காமல், உணவுப்பொருட்களை மட்டும் அனுப்பி வைக்கலாம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும்,  அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்கள், சானிடைசர்கள், நாப்கின்கள் உள்ளிட்ட மருந்துப்பொருட்களையும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுப்பொருட்களை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ.விளையாட்டு அரங்கம் மற்றும் அண்ணாநகர் கிழக்கில் உள்ள அம்மா அரங்கத்தில்  கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.