மதுரை:
துரை வந்த முதல்வரை வரவேற்க அழைத்து வரப்பட்டவர்கள் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை சென்றார். இந்நிலையில் முதல்வரை வரவேற்க பணம், மற்றும் பிரியாணி கொடுப்பதாக பலரை அதிமுகவினர் அழைத்து வந்ததாக தெரிய வந்துள்ளது.

முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், பணம், மற்றும் பிரியாணி கொடுப்பதாக கொடுப்பதாக அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர். இதில் பலருக்கு கட்சி நிர்வாகிகள், பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து முதல்வரை வரவேற்க அழைத்து வரப்பட்டவர்கள் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.