புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 104 ஆனது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.

அதிக அளவில் பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்திலும் இரண்டாவதாகத் தமிழகத்திலும் உள்ளன.

புதுச்சேரியில் இன்று 5 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 104 ஆகி உள்ளது.

இங்கு கொரோனாவால் இதுவரை உயிர் இழப்பு ஏதும் நிகழவில்லை.

இதுவரை இங்கு 43 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.