லூதியானா:

குடியரசு தின விழாவின் போது துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் ஜக்ரோன் நகர அரசு பள்ளியில் குடியரசு தின விழா நடந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மஞ்சித் சிங்(வயது 44) என்ற போலீஸ்காரர் திடீரென தன்னுடைய துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மஞ்சித் சிங்கின் உடலை போலீசார் மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.