துபாய்: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், பஞ்சாப் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, துவக்க வீரராக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 52 பந்துகளில் 63 ரன்களை அடித்தார்.
நிகோலஸ் பூரான் 17 பந்துகளில் 33 ரன்களை அடித்தார். மந்தீப் சிங் 16 பந்துகளில் 27 ரன்களை அடித்தார். மயங்க் அகர்வால் 19 பந்துகளில் 26 ரன்களை அடித்தார்.
இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. சென்னை அணியின் சார்பில் ஷர்துல் தாகுருக்கு 2 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் பியூஷ் சாவ்லாவுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
இன்றையப் போட்டியிலாவது சென்னை அணி வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.