அபுதாபி: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 185 ரன்களைக் குவித்தது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணியை முதலில் களமிறங்க கேட்டுக்கொண்டது. இதன்படி களமிறங்கிய அந்த அணியின் துவக்க வீரர் கேப்டன் ராகுல், 41 பந்துகளில் 46 ரன்களை அடித்தார்.
மந்தீப் சிங் டக்அவுட் ஆக, அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 63 பந்துகளை சந்தித்து 8 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 99 ரன்களை குவித்தார். ஜஸ்ட் 1 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
நிக்கோலஸ் பூரான் 10 பந்துகளில் 22 ரன்களை அடித்தார். அதேசமயம், கடைசி ஓவர்களில் இறங்கிய பேட்ஸ்மென்கள் அதிரடி காட்டத் தவறியதால், 200ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரன் எண்ணிக்கை குறைந்துபோனது.
இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 185 ரன்களைக் குவித்தது.
ராஜஸ்தான் அணியில் தலா 4 ஓவர்களை வீசிய வருண் ஆரோன் கார்த்திக் தியாகி ஆகியோர் விக்கெட் எதுவும் எடுக்காமல், தலா 47 ரன்களை வழங்கினர்.
இன்றையப் போட்டியில் வென்றால் மட்டுமே, பஞ்சாப் அணியால் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்ய முடியும்.