துபாய்: பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 206 ரன்களைக் குவித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் பிரமாண்ட சதத்தை பதிவுசெய்தார் அந்த அணியின் கேப்டன் ராகுல்.

கடைசி வரை அவுட்டாகாத ராகுல், 69 பந்துகளை சந்தித்து, 7 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 132 ரன்களை விளாசினார். மயங்க் அகர்வால் 26 ரன்களையும், பூரான் 17 ரன்களையும், கருண் நாயர் 15 ரன்களையும் அடிக்க, அந்த 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 206 ரன்களைக் குவித்தது.

அந்த அணியில், வேறு யாருக்கும் பெரிதாக வேலை வைக்காமல், தானே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ஆடினார் ராகுல்.

தற்போது, மிகப்பெரிய இலக்கை நோக்கி தன் பயணத்தை துவங்கியுள்ளது பெங்களூரு அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது அந்த அணி.