பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணாமல் போனதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

புஷ்பவனம் குப்புசாமி, தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இவர்கள் மகள் பல்லவி மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கவுசிக் என்பவர் டாக்டர் பல்லவி திடீரென காணாமல் போய்விட்டார். சகோதரிக்கும் அவருக்கும் நேற்றிரவு சண்டை நடந்துள்ளது புகாரளித்துள்ளார்.

இதையடுத்து காணாமல் போன பல்லவியை போலீசார் தேடி வருகின்றனர்.