சென்னை:

யணிகளின் பொழுதுபோக்கிற்காக சென்னை விமான நிலையில், 5 திரைகள் கொண்ட சினிமா தியேட்டரை பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் விமான பயணிகளை வரவேற்கவோ, அல்லது வழி அனுப்பவோ வருபவர்கள் தங்களது ஓய்வு நேரத்தை கழிக்கும் வகையிலும், சில நேரங்களில், விமானம் வருவது மற்றும் புறப்படுவது பல மணி நேரம் கால தாதம் ஆகும் நிலையில், பல மணி நேரம் காத்து கிடக்கும் பொதுமக்களின் வசதியை கருதியும், பொழுது போக்கிற்காகவும், 5 ஸ்கிரின்களை கொண்ட சினிமா தியேட்டர் அமைக்க பிரபல சினிமா நிறுவனமான பிவிஆர் சினிமாஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போது சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கட்டப்பட்டு வரும் பல அடுக்கு கார் பார்க்கில் கட்டடிடத்தின் ஒரு பகுதியில்  சுமார் 250 கோடி ரூபாய் செலவில் , சுமார் 1000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய 5 ஸ்கிரின்கள் கொண்ட சினிமா தியேட்டர் மற்றும் உணவகங்களை அமைக்க பிவிஆர் சினிமாஸ் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பிரபல நிறுவனமான  ஒலிம்பியா குழுமத்துடன் பிவிஆர் சினிமா ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இந்த திட்டம் 2021ம் ஆண்டு மத்தியில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.