குருவே சரணம்.

குருசுவாமி என்பவர் எப்படிப்பட்ட குணங்களை உடையவராய் இருக்க வேண்டும்?

என் ஐயப்பன் ஏழைப்பங்காளன் – முகநூல் பக்க பதிவு

என் குருநாதர் அடியேனுக்கு உபதேசித்தவைகளில் சிலவற்றை உங்களிடம் பகிர்வதில் பேரானந்தம்.

குருவே சரணம்.

1.உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பாராதவராய் இருக்கவேண்டும்.
2. மதபேதம் பாராதவராய் இருக்கவேண்டும்.
3. ஜாதி,இனம், மொழி வேறுபாடு பாராதவராய் இருக்கவேண்டும்.
4. அனைவரையும் சமமாக எண்ணும் மேன்மையான குணம் கொண்டவராய் இருக்கவேண்டும்.
5.வேண்டியவர் வேண்டாதவர் எனும் பாகுபாடு பாராதவராய் இருக்கவேண்டும்.
6.எந்நிலைவரினும் தன்னிலை மறவாதவராய் இருக்கவேண்டும்.
7. சேவை மனப்பான்மை உடையவராய் இருக்கவேண்டும்.
8.அன்புடையவராய் இருக்கவேண்டும்.
9. சதா இறைச் சிந்தனை உடையவராய் இருக்கவேண்டும்
10. தாம் கற்றவற்றை தம் சிஷ்யர்களுக்குக் கண்டிப்பாய் கற்றுத்தருபவராய் இருக்கவேண்டும்.

என் குருநாதரே சரணம் ஐயப்பா!!