அஜய்ஞானமுத்து இயக்கத்தில் “விக்ரம் 58” படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது ‘கோப்ரா’.

லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். முக்கியக் கதாபாத்திரத்தில் மிருணாளினி நடிக்கிறார்.

கோடை விடுமுறை வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏப்ரல் 17-ம் தேதி விக்ரம் பிறந்தநாள் அன்று படத்தின் டீசெர் வெளியிடப்படுமா என ரசிகர் ஒருவர் கேட்டிருந்த நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து, “அதற்கு வாய்ப்பில்லை. அனைத்து ஸ்டுடியோக்களும் மூடியுள்ளன. அதற்கு நீண்ட நாட்களாகும்” என்று தெரிவித்துள்ளார்.