சென்னை,

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இன்று நடைபெற்ற அதிமுக  ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் இறுதி செய்யப்பட்டு, ஏற்கனவே ஓபிஎஸ் அணி சார்பாக போட்டி யிட்ட  முன்னாள் அமைச்சரான மதுசூதனனையே வேட்பாளராக களமிறக்கி உள்ளனர்.

இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.