டில்லி,

மிழகத்தில்  ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ந்தேதி  இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து இந்த தொகுதி காலியாக இருந்து வருகிறது. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தேர்தலுக்கான

மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நாள்:  23-03-2017

மனுக்கள் பரிசீலனை: 24-03-17

வேட்பு மனுக்கள் திரும்பப்பெறும் நாள்: 27-03-17

தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாள்: ஏப்ரல் 12 (12/04/2017)

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் : ஏப்ரல் 15  (15/04/2017)