சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஆளுநரின் செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தகவல் ஆணையர் நியமனம் தொடர்பாக, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆளுநரை சந்தித்தார். அப்போது, தகவல் ஆணையர் தொடர்பான பரிந்துரைக் கடிதத்தை அளித்ததாக அமைச்சர் கூறினார்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், தமிழக தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 1984ம் ஆண்டு பேட்ச் அதிகாரியாவார்.

கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர். தற்போதைய நிலையில் ஆளுநரின் செயலாளராக இருந்தவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.