ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை படங்களை இயக்குனர் தயாரிப்பாளர் கே.எஸ்.தங்கசாமி, இவர் உருக்கமான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது:
இயக்குனர் 2020 ம் ஆண்டு பிறக்கும் போது யாருமே இது போன்ற பேரிடர் நம்மை  நெ ருங்க போகிறது என்று நினைத்து கூட பார்த்து இருக்க வாய்ப்பில்லை. இன்று கொரோனா வால் உலகமே விக்கித்து நிற்கிறது. நோய் ஒரு பக்கம் என்றால் அதை விட மிக கொடிய பொருளாதார  சிக்கல்கள் சாமான்யர்களின் அன்றாட வாழ்க்கை யை முற்றிலுமாக குலைத்து போட்டு விட்டன.

செலவுகள் அப்படியே இருக்கின்றன, வருமானம் அன்றாட அடிப்படை செல வுக்கு கூட இல்லையென்றால் என்ன நடக்கும்? குடும்ப தலைவிகள் என்ன தான் செய்ய இயலும். வெளியில் செல்லுபடியாகாத தன்குமுறலை ஆண்கள்
வீட்டில் காட்ட அதன் விளைவாக பல சிதறல் கள். நீங்கள் தினசரி செய்தி களை கவனம்  செ லுத்தி படிப்பவராக  இருந்தால் கடந்த 2 மாதங்களாக குடும்ப வன்முறைகள்,
தற்கொலைகள்,சண்டைகள்,கொலைகள் அதிகம் இருப்பதை  உணருவீர்கள். சகமனிதரின்
துன்பங்கள் என்னை செயல் இழக்க செய்கின் றன. ஒவ்வொரு நாளும் இதற்கு தீர்வு எப்போது என்று யோசித்து மருகுகிறேன்.
நான் சார்ந்து இருக்கும் திரையுலகில் இருந்து ஒவ்வொரு நாளும்  நான் கேள்விப்படும் விஷயங்கள் என்னை அழுத்துகின்றன. என்னிடம் உதவி கேட்டு வரும் அழைப்புகள் என்னை தூங்க விடுவதில்லை. நான் சொல்லி படப்பிடிப்பில் பல நூறு சாப்பாடுக ள், காப்பி, டீக்கள்  சலிக்காமல் வாங்கி வந்தவர்கள் இன்று அடுத்த வேளை உணவுக்கு சிரமமாக இருக்கிறது என்று போனில் சொல்லும்  போது எனக்குள் ஏற்படும் வலியின் விளைவே இந்த பதிவு.  வெளியில் இருந்து நோக்குபவர்களுக்கு இது வெறும்
ஸ்டுடியோவும் சினிமாவும் ஆக மட்டுமே தெரியலாம். நிதர்சனம் அதுவல்ல. ஒளிரும் திரைக்கு பின்னால் அந்த ஒளிக்கு காரணமான பல ஆயிரம் மின்மினிகளின் உழைப்பு இருக்கின்றது,
கடந்த மூன்று மாதங்களாக எந்த வேலையும்
நடக்கவில்லை. பலருக்கு  ஏற்க னவே வரவேண்டிய தொகையும் வரவில்லை. என்ன செய்வார்கள்?  இந்த நேரத்தில் அவர்களுக்கு செய்யப்படும் உதவிகள் காலத்தால் மறையாத
நினைவுகளாக அவர்களின்  உள்ளத்தில் நிலைத்து இருக்கும்.
சினிமாவின் வழியாக கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பணம், பெயர், புகழ் அனைத்தும் ஒருசேர பெற்றவர்கள் ஏராளம். இந்த நேரத்தில் உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.வேண்டுகோளும் விடுக்கிறேன்.
இவ்வாறு கே எஸ் தங்கசாமி கூறி உள்ளார்.