‘பொன்மகள் வந்தாள்’ படம் தொடர்பாக ஜோதிகா அளித்த பேட்டிக்கும் ராதிகா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த, கொரோனா லாக்டவுன் என்பதால் ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா.
அவரது பேட்டி எழுத்து வடிவிலும், வீடியோவாகவும் வெளியானது. ஜோதிகாவின் தெளிவான பேச்சுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். ஜோதிகாவின் பேட்டி குறித்து ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் :-
“நம்பிக்கையுடன், தெளிவாக தமிழைப் பேசும் ஜோதிகாவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன். எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வடக்கிலிருந்து இங்கு வந்து இதைக் கச்சிதமாகச் செய்த ஒரே நடிகை. அவருக்குப் பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.