ரேபரேலி

ரேபரேலி தொகுதி சட்டபேரவை காங்கிரஸ் பெண் உறுப்பினர் அதிதி சிங் சென்ற கார் விபத்துக்குள்ளாகியது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ரே பரேலி சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் அதிதி சிங். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இவருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் திருமணம் நடக்க உள்ளதாக ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

அத்துடன் இது தொடர்பாக அதிதி சிங் குடும்பத்தினர் சோனியா காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டது. அதை அதிதி சிங் மறுத்தார். அவர் ராகுல் காந்தியை தனக்கு ஒரு அண்ணன் போல எனவும் தாம் ராகுலுக்கு ராக்கி அணிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு அந்த் சர்ச்சை ஓய்ந்தது.

ரேபரேலி ஜில்லா பஞ்சாயத்தில் தலைவருக்கு எதிராக ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. அதற்கு வாக்களிக்க அதிதி சிங் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அவரை அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் துரத்தி உள்ளது. இந்த துரத்தலில் கார் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அதிதி சிகிச்சை பெற்று வருகிறார்.