ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், பெட்ரா கிவிட்டோவா உள்ளிட்டோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர்.

nadal

கிராண்ட்ஸ்லாம் போட்டி என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி சுற்றில் ஆண்கள் பிரிவில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியோபோவை எதிர்க் கொண்டார்.

இதில் சிறப்பாக விளையாடிய நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வெற்ரிப்பெற்று அமெரிக்க வீர்ரை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து நடால் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி சுற்றில் நடால் சிட்சிபசை எதிர்கொள்கிறார்.

petra

இதேபோன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிட்டோவா ஆஸ்திரேலியாவின் ஆஷ்லேக் பேர்ட்டியை எதிர்கொண்டார். இதில் அதிரடியாக் விளையாடிய பெட்ரா 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனையை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். இதனை தொடர்ந்து பெட்ரா கிவிட்டோவா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் டி கொலின்ஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.