டில்லி:

ஃபேல் விமான கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை, ஆனால் நகல் எடுக்கப்பட்டுள்ளன என்று  மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை  உச்சநீதி மன்றம் கடந்த புதன்கிழமை முதல் உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது, வாதாடிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், பாதுகாப்புத்துறையின் ரகசிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது. அதன் அடிப்பைடயிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ‘ பத்திரிக்கையாளர் என்.ராம் கட்டுரையில் வெளி யான ஆவணங்களை திருட்டு ஆவணங்களாக கருத வேண்டும், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த ஆவணங்களை வெளியிட்ட பத்திரிக்கையாளர் என்.ராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  ஆவணங்களை கூட  சரிவர பாதுகாக்க  தெரியாத மோடி அரசு நாட்டை எப்படி பாதுகாக்குமென எதிர்க்கட்சிகள் கேள்வி  எழுப்பின.

இந்த நிலையில்,  பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் அளித்த பேட்டியின்போது, ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான  ஆவணங்கள் திருடப்படவில்லை என்றார்.  ஆனால், அந்த ஆவணங்களை திருட்டுத் தனமாக நகல் எடுத்து அதன் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளளனர் என்று தெரிவித்தார்.

வழக்கின் விசாரணையின்போது,  வாதத்திற்கு வலு சேர்க்கவே திருட்டு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதாக வும் விளக்கம் அளித்தார்.

உச்சநீதி மன்றத்தில் விசாரணையின்போது, ஆவணங்கள் திருட்டு என்று கூறிவிட்டு, தற்போது நகல் எடுக்கப் பட்டு உள்ளது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பல்டி அடித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.