அம்பாலா: இந்திய விமானப்படையில்  ரஃபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இணைக்கப் படுகிறது. அம்பாலா விமானப்படை தளத்தில் இதற்கான விழா இன்று  நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில்,  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, ரஃபேல் போர் விமானங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  இந்த நிகழ்ச்சியில்,  பிரான்ஸ் ராணுவத் துறை அமைச்சரும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி, முதல்கட்டமாக 10 விமானங்கள் தயாராக இருப்பதாக பிரான்ஸ் அறிவித்தது.  அதில் முதல் 5 போர் விமானங்கள் அங்கேயே பயிற்சிக்காக உள்ளது. மீதமுள்ள 5 போர் விமானங்கள், 2020ம் ஆண்டு  ஜூலை மாதம்  29ம் தேதி இந்தியா வந்த இந்த விமானங்கள், அம்பாலா விமானப்படை தளத்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்பாலா விமானப்படை தளத்தில்நீற்று நடைபெறும் நிகழ்ச்சியில்,5 ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலையில் இந்தியா வருகிறார் பிளாரன்ஸ் பார்லி.இந்த நிகழ்ச்சிக்குப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அம்பாலாவில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.