நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34.

ஆதாரங்களின்படி, சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இவரின் மறைவால் பாலிவுட் திரையுலகினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் சிங்கின் திடீர் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில்

“சுஷாந்த் சிங்கின் மறைவைக் கேட்டு வருத்தமடைந்தேன். திறமையான இளம் நடிகர் விரைவாக நம்மை விட்டுச் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்கள் அனைவரும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.