டில்லி

த்தியப் பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் குழு உறுப்பினர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.   இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை இன்னும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.   அரசியல் கட்சிகள் இப்போதே தங்கள் தேர்தல் வியூகங்களை அமைக்கத் தொடங்கி விட்டன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழுக்கள் குறித்து அறிவித்துள்ளார்.    மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் சில நாட்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.   அவர் இப்போது இந்தக் குழுக்களின் ஒருங்கிணைப்பு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை உறுப்பினரான ஜோதிராதித்ய சிந்தியா பிரச்சாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.   மூத்த காங்க்கிரஸ் தலைவரான சுரேஷ் பச்சோரி தேர்தல் திட்ட வாரிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.   அத்துடன் கொள்கை பரப்புக் குழு, தேர்தல் அறிக்கைக் குழு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.