டில்லி

மோடியின் விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதை புகழ்ந்த மணிசங்கர் ஐயருக்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி அவுரங்கசீப் என ராகுல் காந்தியை விமர்சித்தார்.   அது மிகவும் பரபரப்பாகி உள்ளது.  இந்நிலையில் அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

ராகுல் காந்தி, “வரலாற்றில் அவுரங்கசீப் முகலாய அரசை நாடெங்கும் விரிவு படுத்தியவர்,  தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.  சின்ன சின்ன சமஸ்தானங்களை வென்று அவைகளை இணைத்து மாபெரும் அரசாக்கியவர் அவுரங்கசீப் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த மாபெரும் அரசுக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த போதிலும் நாட்டின் வளத்தை தாமோ அல்லது தம்மை சேர்ந்தவர்களோ அனுபவிப்பதை அவர் என்றும் அனுமதித்தது இல்லை” என மோடிக்கு பதில் அளித்துள்ளார்.