டெல்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:  நாட்டை அமைதியான முறையில் வழிநடத்த வேண்டும் என்ற மகாத்மா காந்தி கூறி உள்ளார்.

எனவே அதன்படி, வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மோடி அரசுக்கு மீண்டும் ஒருமுறை முன்வைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லியில் நேற்று விவசாயிகள் டத்திய டிராக்டர் பேரணியில் ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு என நிலைமை மோசமானது. பேருந்துகள், போலீஸாரின் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.

வன்முறையில் காவல்துறையினர் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும், டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் பலியானாதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.