டில்லி:

ஒகி புயல் காரணமாக கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒகி புயல் காரணமாக தமிழகம், கேரளாவை சேர்ந்த மீனவர்கள் பலர் கடலில் சிக்கி தவித்து வருகின்றனர். அதில் பலர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலை என்ன ஆனது என்பது கேள்வி குறியாகியுள்ளது. இதனால் மீனவ குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி  டுவிட்டரில்  கேட்டுக் கொண்டுள்ளார். உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.