பெங்களூரு,

னக்கு ராகுலை ரொம்ப பிடிக்கும் என்று கூறிய 107வயதான பாட்டிக்கு பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், அன்புள்ள திபாலிக்கு, தங்களது பாட்டியின் 107வது பிறந்த நாளுக்கு என்னுடைய மகிழ்ச்சியான வாழ்த்துக்களை கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களோடு அரவணைத்து தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

சமீபத்தில் பெங்களூருவை சேர்ந்த திபாலி சிகந்த் என்பவர் தனது பாட்டி திபாலியின் படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதில், அவர், “எனது பாட்டியம்மாவுக்கு இன்று வயது 107.  அவர் ராகுல் காந்தியை சந்திக்க விரும்புகிறார்.  காரணம் என்ன என கேட்டால் அவர் மிகவும் அழகாக இருக்கிறார் என என் பாட்டி சொல்கிறார்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து, இந்த பதிவுக்கு பதில்அளித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட் செய்துள்ளார்.

அதில், திபாலிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறி உள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள திபாலி, “தனிப்பட்ட முறையில் எனது பாட்டியம்மாவுக்கு ராகுல் வாழ்த்தளித்தது  அவருடைய மனிதத் தன்மையை காட்டுகிறது.  வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.  ஒவ்வொரு வாழ்த்தும் எனக்கு முக்கியமானது” என குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் டுவிட்டர் பதவிக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக இளைஞர் சமுதாயத்தினரிடையே அதிகமான வரவேற்பு உள்ளது.

ராகுலின் பாஜக குறித்தும், பிரதமர் மோடி குறித்த பதிவுக்கும் டுவிட்டர் வலைதளவாசிகளிடைய பெரும் வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருகிறது.

சமீபகாலமாக ராகுலின் டுவிட்டரை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டி வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.