சில்லோங்:

மேகாலாயா மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.

இதை தொடர்ந்து அங்கு நடந்த ‘அமைதி’ கொண்டாட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.

அங்கு கலந்துகொண்ட பார்வையாளர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். பார்வையாளர்களின் கேள்விகளுக் அவர் பதிலளித்தார்.

அங்கு கலைநிகழ்ச்சிகள் நடத்திய கலைஞர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.