டில்லி:

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி தான் எனக்கும் தலைவர் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்தியில் சோனியாகாந்தி பேசுகையில், ‘‘ நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்பு உள்ளது. அதனால் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எனக்கும் தான் தலைவர். கட்சியில் அவரை மீறி நானும் செயல்பட மாட்டேன். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை’’ என்றார்.

தொடர்ந்து சோனியா பேசுகையல், ‘‘ராகுல்காந்தி வழியில் நாம் இணைந்து பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்த வேண்டும். குஜராத் தேர்தலில் கடின சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட்டோம். சமீபத்திய ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவு நமது வெற்றியை உறுதி செய்துள்ளது’’ என்றார்.