டில்லி

விமானக் கோளாறு காரணமாக ராகுல் காந்தியின் தேர்தல் பொதுக்கூட்டங்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து வரும் மக்களவை தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நாட்டின் பல இடங்களில் நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் நாடெங்கும் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அவ்வகையில் இன்று அவர் பீகார், ஒரிசா மற்றும் மகாராஷ்டிராவில்நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொள்வதாக இருந்தார். இந்நிலையில்  அவரது பொதுக் கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டு தாமதமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “பாட்னாவுக்கு செல்லும் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் ராகுல் காந்தி இன்று டில்லிக்கு திரும்ப நேரிட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த சமஸ்திபூர் (பீகார்), பாலசோர் (ஒரிசா) மற்றும் சங்கம்னேர் (மகாராஷ்டிரா) ஆகிய பொதுக் கூட்டங்கள் தாமதமாக நடைபெறும். தடங்கலுக்கு வருந்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.