அவரங்குறிச்சி:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான நல்லுறவு தொடர்கிறது என்று அரவக்குறிச்சியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் செய்த அவர், பிரதமரையும் தமிழக முதல்வரையும் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் இன்று அரவக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் என்றும், காங்கிரஸ் – திமுக உறவு வலுவாக உள்ளதாகவும், திமுகவுடன் நல்லுறவு தொடர்கிறது என்றும் தெரிவித்தார்.