டில்லி

பாமக தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார்.

பாமக தலைவர்களில் ஒருவரான காடு வெட்டி குரு உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனை\யில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் நேற்று முன் தினம் மரணம் அடைந்தார்.   அவரது மறைவு அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி காடுவெட்டி குருவின் மறைவுக்கு மரணம் தெரிவித்துள்ளார்.  குருவின் மனைவி லதாவுக்கு அவர் இரங்கல் கடிடம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், “அன்புள்ள லதா ஜி,  தங்கள் கணவர் திரு காடுவெட்டி ஜே குரு அவர்களின் மறைவு குறித்த செய்தையைக் கேட்டு நான் மிகவும் துயருற்றேன்.  குரு அவர்கள் அனைத்து சமுதாய மக்கள் நலனுக்கும் தொண்டாற்றிய ஒரு மக்கள் தலைவர்.   உங்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.    இந்த கடுமையான் நேரத்தில் நீங்களும் உங்கள் குடும்பமும் ஆறுதல் அடைய நான் பிரார்த்திக்கிறேன்.