திருவனந்தபுரம்:

ளர்ந்து வரும் பொருளாதரத்தை மோடி அரசு அழித்து வருகிறது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் இருந்து நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரிக்கிறது, வேலையின்மை அளவு அதிகரிக்கிறது என தொடர்ந்து பிரதமர் மோடியையும், மத்தியில் ஆளும் பாஜக அரசையும் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.

இதுகுறித்து மேலும் பேசிய ராகுல் காந்தி, மத்திய வேளாண் சட்டங்களின் தீமைகள் விவசாயிகளுக்கு புரிந்திருந்தால் நாடு தீப்பிடித்து எரிந்திருக்கும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களின் உண்மை விவரங்களை விவசாயிகள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று கேரள மாநிலம் வயநாட்டில் கல்பேட்டையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார்.