டெல்லி: ஹத்ரஸ் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ஹத்ரஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந் நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: ஹத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை  சம்பவத்தில் கொலை   செய்யப்பட்ட   இளம்பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச பாஜக அரசு பாதிக்கப்பட்டவர்களை முடக்கி வைத்து அவர்களை துன்புறுத்துகிறது. ஹத்ரஸ் வழக்கில் நியாயமான பதிலை நாடே எதிர்பார்க்கிறது என்று தெரிவித்து உள்ளார்.