சென்னை:  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, வரும்  ஜனவரி 14 ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில்  நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண  மதுரை அவனியாபுரம் செல்ல இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகசட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக ஜனவரி இறுதியில் ராகுல்காந்தி தமிழகம் வருவார் என, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சமீபத்தில், தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக ராகுல்காந்தி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 14ந்தேதி பொங்கலன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி, அன்று மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க உள்ளதாகவும், தமிழக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.