சென்னை: பிப். 27, 28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.

சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக தேசிய தலைவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல்காந்தி ஏற்கெனவே ஜனவரி 14ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகம் வந்திருந்தார்.

பின்னர் ஜனவரி 23ம் தேதி முதல் 3 நாள்கள் கோவை, திருப்பூா், கரூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந் நிலையில் பிப்ரவரி 27ம் தேதி ராகுல்காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிப்ரவரி 27ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். மார்ச் 1 வரை மொத்தம் 3 நாள்கள் தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்று கூறினார்.