புதுடெல்லி:
டந்த செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேஸ்புக் பக்கத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை, பிரதமர் மோடியின் பேஸ்புக் பக்கத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை விட 40% அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பேஸ்புக் மதிப்பீட்டாளர்களிடம் இருந்த தகவல்கலின் படி, இந்த தகவலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக 4 பேஸ்புக் பக்கங்களை மதிப்பிடு செய்ய காங்கிரஸ் கட்சி பேஸ்புக் மதிப்பீட்டாளர்களை நியமித்தது. அவர்கள் அளித்த தகவலில் மேற்குரிய கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேஸ்புக் பக்கத்தை 13.9 மில்லியின் பேர் பார்த்துள்ளனர். இதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டதுடன், ராகுல் காந்தியின் பதிவுக்கு லைக்ஸ் அளித்து அதை ஷேர் செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் மதிப்பிட்டாளர்களால் கண்காணிக்கப்பட்ட 4 பக்கங்களில், மோடி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் பக்கங்களும் அடங்கும்.

சமூக ஊடகங்களில் அதிகம் பின்தொடரப்பட்ட முதல் ஐந்து உலகத் தலைவர்களில் ஒருவரான மோடியின் பக்கத்தை, காந்தியின் பக்கத்தில் 3.5 மில்லியனுடன் ஒப்பிடும்போது 45.9 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். கடந்த வாரம் அவரது ஈடுபாடுகள், காங்கிரஸ் தரவுகளின்படி, 8.2 மில்லியன் மட்டுமே.

காங்கிரசின் 3.6 மில்லியனுடன் ஒப்பிடும்போது, ​​16 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் 2.3 மில்லியன் மக்களிடமிருந்து பதில்கள் வந்துள்ளன. பேஸ்புக்கில் காங்கிரசுக்கு 5.6 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ராகுல் காந்தியைப் பின்பற்றுபவர்களும் 3.5% வளர்ச்சியடைந்துள்ளனர், இந்த காலகட்டத்தில் அவர் 52 முறை பதிவிட்டுள்ளார்.

மோடி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றியது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டார், செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை அவர் 11 முறை பதிவிட்டுள்ளார்.

மோடியை விட குறைவான பார்வையாளர்களை கொண்டிருந்த போது, ராகுல் காந்தியின் பக்கத்தை அதிகம் பேர் பார்த்துள்ளதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன என்று தகவல் தொடர்பு ஆலோசகர் திலீப் செரியன் தெரிவித்துள்ளார்.

“முதலாவது காரணம் ராகுல் பிரச்சினைகள் குறித்து பதிவிட்டு உள்ளார். இரண்டாவதாக, ‘புதிய தன்மை’யுடன் செய்ல்பாடுகிறார். இது அதிகளவிலான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. மூன்றாவது அரசின் தவறுகளை தட்டி கேட்டுள்ளது இதில் மக்கள் ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு மக்களை யோசிக்க வைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.