கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோயமுத்தூர் மாவட்டத்தில் வரும் 23, 24, 25-ந்தேதிகளில, ராகுல்காந்தி முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

கோவை கோபாலபுரம் பகுதியில்  செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக ‘அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாகவும், 5 கட்ட தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறியவர்,  முதல்கட்டகமாக  வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவை மேற்கு மண்டலத்தில்  மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்றார்.

மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. 7 பேர் விடுதலை செய்யப்பட்டால் அதை காங்கிரஸ் எதிர்க்கவும் செய்யாது. ஆதரிக்கவும் செய்யாது.  நீதிமன்றம் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்துவதை ஏற்க முடியாது என அழகிரி கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி, செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.